Wednesday, May 11, 2011

இதுதாண்டா வாழ்க்கை......



கடவுள் ஒரு கழுதையை முதலில் படைத்து அதனிடம் சொன்னார். நீ ஒரு கழுதை. நீ உன்முதுகில் நிறைய சுமைகளை சுமந்து காலை முதல் மாலை வரை உழைக்க வேண்டும். உனக்கு மூளை கிடையாது. உனக்கு புல்தான் உணவு. நீ 50 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு கழுதை பதில் சொன்னது. 50 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 20 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.



-----------------------------------------------------------------------------------------------
கடவுள் ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்.

நீ ஒரு நாய் , நீ மனிதனுக்கு நல்ல நண்பண். நீ அவனது வீட்டை பாதுகாக்க வேண்டும்.உனக்கு வேண்டிய உணவை அவன் தருவான்.. நீ 30 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு நாய் பதில் சொன்னது. 30 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 15 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.





----------------------------------------------------------------------------------------------
கடவுள் ஒரு குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

நீ ஒரு குரங்கு. நீ மரத்துக்கு மரம் தாண்டுவாய்.. பல வித்தைகளை காட்டுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்



அதற்கு குரங்கு சொன்னது. 20 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 10 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்கு கடவுளும் சம்மதித்தார்.



-----------------------------------------------------------------------------------------------
கடவுள் கடைசியில் ஒரு மனிதனைப் படைத்து அவனிடம் சொன்னார்.

நீ ஒரு மனிதன். இந்த உலகில் நீ ஒரு முழுமையான படைப்பு . நீ எல்லா மிருகங்களுக்கும் தலைவன். நீ இந்த உலகத்தேயே ஆளுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு மனிதன் சொன்னான். 20 ஆண்டுகள் ரொம்ப குறைவு. எனவே கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருஷங்களையும், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருஷங்களையும், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருஷங்களையும் எனக்கு தாருங்கள் என்று கேட்டான். கடவுளும் அதற்கு சம்மாதித்தார்.

அதிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், அதன் பிறகு கல்யாணம் , வேலை செய்து எல்லா சுமைகளையும் முதுகில் சுமந்து 30 வருடங்கள் கழுதைப் போல வாழ்ந்தான்.பிறகு குழந்தைகளை நல்ல படியாக பாதுகாத்து வளர்த்து கிடைத்தவைகளை சாப்பிட்டு நாய் போல 15 வருடம் வாழ்ந்து வந்தான். பின் வேலையில் இருந்து ஒய்வு பெற்று 10 வருடங்கள் குரங்கு போல மரத்துக்கு மரம் தாவுவது போல வீட்டுக்கு வீடு, பையன் வீட்டில் இருந்து பொண்ணு வீட்டுக்கும் மாறி மாறி சென்று பேரக் குழந்தைக்களுக்கு வேடிக்கை காட்டி வாழ்ந்து வருகிறான்

Tuesday, May 10, 2011

இந்திய மக்கள் அனைவரும் அவசியம் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய வலைத்தளம்.

நான் ஆன்லைனில் மேய்ந்து கொண்டிருந்த போது என் கண்ணில்பட்ட மிகவும் பயனுள்ள வலைத்தளம். இதை நான் இங்கே உங்களுக்காக பகிர்ந்து அளிக்க்கிறேன்.இந்த தளத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்தவொரு ஊரிலும் எந்த வித குருப் இரத்ததானம் பண்ணுவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.



A website was developed to hold the details of blood donors in india. It is very useful site who are searching for the blood in particular state and even in particular city of the state and in particular area of the city.



என்ன இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்ததா இல்லையா என்பதை உங்களின் பின்னுட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். இது போன்ற உபயோகமான வலைத்தளம் உங்கள் கண்ணில்பட்டால் எனக்கு தெரியப்படுத்தவும். அதற்கு என் மனமார்ந்த அட்வான்ஸ் நன்றிகள்.

இதை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும். முடிந்தால் தானம் கொடுக்கமுன் வருபவர்களும் இந்த வளைத்தளத்தில் இணையாலாம்.

சீரியஸா ஒரு சிரிப்பு சமாச்சாரம்!

தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்கிறது ஆனந்தமூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.
சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் எனும் செய்தியுடன் கூடவே, சிரிப்பு குழந்தைகளுக்கு தரும் “டானிக்” போன்றது எனவும் இந்த ஆராய்ச்சி சிரிப்பைக் குறித்து விவரித்து வியக்க வைக்கிறது.hero__3_1
தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைகின்றனவாம், இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையையும் அவர்கள் சொல்லித் தருகின்றனர்.
மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு “தினம் அரை மணி நேரம் சிரிப்பு” என சோதனை நடத்தியதில் அவர்களுடைய உடலில் இருந்த அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிட்டதாம்.
சிரிக்கும் போதும், ஆனந்தமாய் உணரும் போதும் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களே இந்த மாற்றத்துக்கான விதைகளைத் தூவுகின்றன. குறிப்பாக மகிழ்ச்சியளிக்கும் எண்டோர்பின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் பெர்க்.
மனம் விட்டுச் சத்தமாய் சிரிப்பது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் தருகிறது என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றனவாம்.
அதே நேரத்தில் மிக அழுத்தமான அழுகாச்சிப் படங்களைப் பார்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலுக்குத் தீமைகளை விளைவிக்கின்றனவாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்க்கும் போது இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பெருமளவு குறைவது இதன் ஒரு காரணம் என்கின்றார் மருத்துவர் பெர்க்.
நல்ல ஆரோக்கியம் வேண்டுமா, தினம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பாருங்கள் என்கிறார் மெரிலண்ட் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் மில்லர்.

கன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. !

ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !

இலையுதிர்காலத்தில் அமெரிக்காவின் ஒரு காட்டுப் பகுதியில் நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.
இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.
கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.
காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம் :)
வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…
P1
இதன் தொழில் நுட்பம் இதோ…
P4
பச்சை நிறமே பச்சை நிறமே….
அழைத்ததும் வந்தாய் எந்தனிடமே…
P2

P3
Thanks :  http://winarco.com/color-picker-pen-by-jinsun-park/

மனதை தொட்டு செல்லும் ஒரு ஆண்மகனின் கதறல்கள்...........


மனதை தொட்டு செல்லும் ஒரு ஆண்மகனின் கதறல்கள்...........

என் அம்மாவிற்கு ஒரு கண்தான் உள்ளது. அவளை நான் வெறுக்கிறேன். அவளை பார்க்கும் போதெல்லாம் நான் வெட்கப்பட்டு கூனி குருகிப்போகிறேன். அவள் ரோட்டோர கடை நடத்தி வருமானம் ஈட்டுகிறாள்.நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஃபீல்ட் ட்ரிப் போகும் போது என்னை வழியனுப்ப ஸ்கூலுக்கு வந்தாள் அவளை நண்பர்கள் மத்தியில் பார்க்க வெட்கம் பிடுங்கி தொலைந்தது. அன்றிலிருந்து என் நண்பர்கள் என்னை கேலி செய்ய தொடங்கினார்கள்,

எப்போதும் அம்மா என் கண்ணில் படாமல் இருக்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் வாய்விட்டே அவளிடம் சொல்லிவிட்டேன். உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை அம்மா உன்னால் நான் எல்லோர் முன்னால் கேளீக்கை பொருளாட்டம் ஆகிவிட்டேன். நீ செத்து போய்விடேன் என்றும் சொல்லிவிட்டேன். அதற்கும் என் அம்மா ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்கள்.

இதை நீண்டகாலமாக சொல்லவேணும் போலிருந்தது அதானால் சொல்லிவிட்டேன். சொன்னதால் என் மனதுக்கு ஒரு திருப்தி.

அம்மா அதற்காக என்னை தண்டிக்காததால் அவளை அதிக அளவு மனதை காயப்படுத்தவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று இரவு தூக்கத்தில் முழித்து தண்ணிர் குடிப்பதற்க்காக கிச்சனுக்கு சென்ற போது, அம்மா சத்தமில்லாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்தேன். அவள் எதைபார்த்தாவது பயந்து இருந்தால் என்னை எழுப்பி இருப்பாள் அப்படி ஏதும் நடக்கவில்லையென்பதால் நான் மாலையில் நான் சொன்னதிற்காகத்தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பது எனக்கு மெல்ல புரிந்தது. அதனால் என் இதயத்தின் ஒரமாக யாரோ கிள்ளியது போன்ற வலி தோன்றியது.என்னுடைய வறுமையையும் என் ஒரு கண் அம்மாவையும் வெறுத்தேன். அவளிடம் சொன்னேன் நான் வளர்ந்து ஒரு பெரிய வெற்றிகர ஆளாக வருவேன் என்று.


அன்று முதல் நான் மிகவும் கடினமாக படித்தேன். எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்ததால் எனது கல்லூரி படிப்பையும் வெளி நாட்டில் முடித்து மிகப் பெரிய வேலையில் அமர்ந்து, அதன் பின் கல்யாணம் முடிந்து குழந்தைகளை பெற்று, குழந்தைகளின் நலன் கருதி சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டேன். இப்போது நான் ஒரு சந்தோஷமான வெற்றிகரமான மனிதன் காரணம் இந்த சூழ்நிலை என் அம்மாவை நினைவுபடுத்தவில்லை.

நாளுக்கு நாள் என் சந்தோஷம் பலமடங்கு பெருகியது. ஒரு நாள் எதிர்பாராமல் யாரோ என்னை பார்க்க வந்தாக சொன்னார்கள். ஹாலில் வந்த பார்த்த போது அது என் ஒற்றை கண் அம்மா. வானமே என் மேல் இடிந்து விழுந்தது போல ஒரு உணர்வு. என் அம்மாவை பார்த்த என் சிறு குழந்தை பயந்து அலறி அழுக ஆரம்பித்தது.

உடனே நான் என் அம்மாவை பார்த்து நீ யார்? எதுக்காக நீ என் வீட்டிற்கு வந்தாய்? என் குழந்தை உன்னை கண்டு பயப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே போ என்று கத்தி அவளை யாறென்று தெரியாதது போல நடிக்க ஆரம்பித்தேன்.அவளும் மன்னித்து கொள்ளுங்கள் நான் விலாசம் மாறி வந்து விட்டேன் போலிருக்கிறது என்று சொல்லி வெளியே போக ஆரம்பித்தாள்.அவளுக்கு என்னை யாறேன்று தெறியவில்லை அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டு அவளை மீண்டும் என் வாழ் நாள் உள்ளவரை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்

ஒரு நாள் எனக்கு ரீயூனியன் கடிதம் என் பள்ளியில் இருந்து வந்தது. அதில் கலந்து கொள்வதற்காக என் மனைவியிடம் பொய்சொல்லி பிஸினஸ் விஷயமாக செல்கிறேன் என்று சொல்லி வந்துவிட்டேன். ரீயூனியன் முடிந்த பின் ஒரு ஆர்வத்தினால் நான் வசித்த வீட்டை பார்க்க சென்ற போது என் அம்மா குளிர்ந்த தரையில் படுத்து இருந்தாள். அம்மா என்று அவளை அழைத்தேன் பதில் இல்லை அப்போதுதான் தெரிந்தது என் குரலுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் அவள் இறந்து கிடப்பது .அவள் கையில் ஒரு கவர்.. அது எனக்கு எழுதப்பட்ட கடிதம்..


அதில் அவள் எழுதியிருந்தாள்

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் உள்ள மகனுக்கு உன் அம்மா எழுதிக் கொள்வது
,

எனது வாழ் நாள் முடியும் தருணம் வந்துவிட்டது. கவலைப்படாதே நான் மீண்டும் உன் வீட்டிற்கு வந்து உன் குழந்தையை வந்து பய முறுத்த மாட்டேன்.நீ மட்டும் எப்போதாவது வந்து பார்த்து செல்ல மாட்டாயா என்ற மிகப் பெரிய ஆசை எனக்குள் இருந்தது.உன் பள்ளியில் ரீயூனியன் இருப்பதாக கேள்விபட்டேன். கவலைப்படாதே நான் அங்கு ஒற்றை கண்ணோடு வந்து உனக்கு கெளரவ குறைச்சல் ஏற்படுத்த மாட்டேன். என் உள்ளுணர்வு சொல்லுகிறது நீ ரீயூனியன் வரும் போது நீ விட்டிற்கு வருவாய் என்று. அது வரை என் உயிர் இருக்குமா என்பது தெரியாததால் நான் இந்த கடிதத்தை உனக்கு எழுதி வைத்துள்ளேன்.


உனக்கு சிறுவயது இருக்கும் போது ஒருவிபத்தில் உன் அப்பாவை இழந்தேன். அந்த விபத்தில் உன் ஒரு கண்ணும் பறி போனது. நீ ஒற்றை கண்ணோடு வலம் வருவதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அதனால் நான் என் கண்ணை உனக்கு தானம் பண்ணினேன்.நீ என் கண்ணால் இந்த உலகத்தை பார்ப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.நீ செய்த எந்த செயல்களூம் எனக்கு எப்போதும் மனவருத்தத்தை தரவில்லை. சில சமயங்களில் நீ என்மீது கோபபட்டு கத்திய போதும் நீ என்மீது வைத்துள்ள அன்பினால்தான் நீ அப்படி கத்துகிறாய் என்று கருதினேன்.நீ வெகு சிறியவயதில் நீ என் காலைஸ் சுற்றி சுற்றி வந்ததை மட்டுமே நான் நான் மிஸ் பண்ணுகிறேன்.


உன்னையே உலகமாகவும்
உன்னை எப்பொழுதும் இழந்துதவிக்கும்

உன் அம்மா

அம்மா அம்மா என்று நான் கதறி அழுகத்தான் முடிந்தது.

-------

நான் ஆன்லைனில் ஆங்கிலத்தில் படித்த இந்த கதையை நான் என் வழியில் இங்கே தந்துள்ளேன். இந்த அன்னையர் தினத்தில் தன் அம்மாவை மறந்து இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த மகனின் கதறல் காதில்விழும் என்ற நம்பிக்கையில் இதை இங்கே வழங்கியுள்ளேன்.அன்னை இருக்கும் வரை நமக்கு அவர்களின் அருமை பெருமை தெரியாது. இழந்தவர்களிடம் கேட்டுபாருங்கள் அவர்கள் கதை கதையாக சொல்லுவார்கள். கடவுள் ஒவ்வொருவரிடமும் வந்து இருக்க முடியாதால்தான் அவர் வாழும் தெய்வாமாக அன்னையை படைத்து நம்மிடம் அனுப்பி வைத்துள்ளார்